ஆருத்ரா எழுதியவை | திசெம்பர் 1, 2013

ஒரு நாளின் மரணம்.

poi

சொல்வதற்கு முடியாததும்
தெரிந்து கொள்வதற்கு
இயலாததுமான காலங்கள்
கடைசியில் கிடைத்தன.

வாழ்த்துக்கள் ‌ பகிரப்படா
பரிசுகள் தரப்படா
பிறந்தநாள் வந்து
விரைகின்றது.

அம்மா மரணித்த துயரம்
இரங்கல் தெரிவிக்காத நாட்கள்
கண்ணீரால் நனைந்து போயிற்று.

பூச்சும் மெழுக்குமான
வார்த்தைச் சரமாடிய
வேடிக்கைப் பொழுதுகள்
கேலியாக நகர்கின்றன.

இதைவிட மோசமான
தருணமொன்று
இனி வந்து வாய்க்கப் போவதில்லை.

நாட்காட்டியில்
இன்றைய நாள்
மாதவிலக்கான நாள்.

நட்பெனப்படுவது யாதெனில்
உயிர்ப்புக்களை
உருக்குலைத்து விடுவது.

வேனிற்காலத்து காலைகளும்
கோடைகாலத்து கொடுமைகளும்
கை கோர்க்க முடியாது
கலைந்து சென்றன.

நடுவழியில் இறங்கி
போக்கிடம் தேடி அலைகின்றது
நமது நட்பெனும் நினைவு.

viruppam irunthal

(01.12.2013)*******************************************************


மறுவினைகள்

  1. romba pidichathu


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்