ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து கருத்து தெரிவித்த கருணாநிதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைத் தமிழர்களுடைய வாழ்வின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் யோசித்து, முடிந்தால் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளுடைய துணையோடு இப்போது எப்படி இந்தத் தீர்மானத்தில் இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று குரல் கொடுத்தோமோ அதைப் போல ஒருமித்த குரலைக் கொடுத்து ஆவன செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனால் இல்கை இதுவரை தமிழர்களுக்குப் புரிந்த கொடுமைகளுக்கு பரிகாரம் தேடுகின்ற நெருக்கடி ஏற்படும். ஏனென்றால் சிசுக்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், முதியவர்கள் என்று ஆயிரக்கணக்கான தமிழ்த் தாய்மார்களும், தமிழர்களும் சித்ரவதைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
சவக்குழிக்களுக்குச் சென்றிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படவும், உலக நாடுகள் முன்னால் தலை குனிந்து நின்று காரண காரிய விளக்கங்கள் சொல்லவும் இலங்கை அரசு கடமைப்பட்டிருக்கிறது.
இப்போது தான் பெரும்பாலான நாடுகளுடைய தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த நாடுகள் தான் என்ன நடவடிக்கை எடுப்பது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றார் கருணாநிதி.
விசர் வினாசித்தம்பியின்ர விமர்சனம்.
அடங்கொக்க மக்கா! சுடலைஞானம் சுடலைஞானம் எண்டது இதுதானோ!
ஆராவது ஆக்கி வைச்சால் பரிமாறுறதுக்கு முன்னுக்கு நிப்பியளாக்கும்.
எலெக்சன் டைமிலயும் ,சொத்து சம்பந்தமா வழக்கு வரேக்கையும் தான் ஈழத்தமிழரிலை உங்களுக்கு பாசம் பொங்கி வழியும். இது விளங்காத சனங்கள் என்னை விசர் வினாசித்தம்பி என்கினம்.
பரதேசி ஆடேக்கை பன்னாடை கழண்டு விழுந்த கதையாயல்லோ இருக்கு!
மறுமொழியொன்றை இடுங்கள்