நானும் நீயும்
பள்ளிப் பருவத்தில்
இணைந்து படித்ததில்லை.
ஜாடைமாடையாக
பேசிக் கொண்டதில்லை.
யான் நோக்குங்காலை
நிலம் நோக்கி
நாணிக் கொண்டதில்லை.
கண்களால்
பேச்சுப் பரிவர்த்தனை
நடந்ததில்லை.
பெற்றோர்கள்
பேசி வைத்து
நடந்த திருமணம்தான்.
எனினும்……..
அதிகாலை
வேலைக்காக தயாராகையில்
முதல் நாள் இரவே
நீ எடுத்து வைத்த
கனமான காலுறையும்
கழுத்து மப்ளரும்..
உறக்கத்தில் இருந்த
உன்னிடம் பிறந்தது
பரவசக் காதல்.
(13.03.2015)
மறுமொழியொன்றை இடுங்கள்